Friday 27 April, 2007

முன்னுரை

ம்ம்ம்ம்… ரெண்டு நாளா யோசிச்சு யோசிச்சு பார்த்தேன்…
கவிதை எல்லாம் எழுதற அளவுக்கு நமக்கு அறிவு கெடையாது…
சரி கதை??!!! வேற வெணையே வேணாம்..
விமர்சனம் பன்றதுக்கு நம்ம மொதல்ல எல்லா விஷயத்துலயும் correct’ஆ இருக்கனும்… so அதுவும் ஒத்து வராது…
நம்ம சொந்தமா ஏதாவது யோசிச்சு பண்றதுதானே கஷ்டம். நாம பல இடங்களில் பார்க்கிற, ரசிக்கிற நல்ல/கெட்ட விஷயங்களை எழுதலாமே’னு தோனுச்சு. so அதையே follow பண்ணலாம்னு முடிவு பண்ணிருக்கேன்.
அதுக்காக ரொம்ப serious’ஆ யோசிச்சு எழுதவும் நமக்கு வராது. அதனால அப்படியே போற போக்குல என்னென்ன தோனுதோ அதை எல்லாம் எழுதிகிட்டே போறேன். பார்ப்போம் எந்த அளவுக்கு work out ஆகுதுன்னு ;-)

எல்லாத்துக்கும் மேல முக்கியமான விஷயம் மேலே ஏற்கனவே சொன்ன மாதிரி கதை, கவிதை எல்லாம் எழுதும் ஆள் நான் இல்லை. இந்த BLOG என்னை impress செய்த பல விஷயங்களின் தொகுப்பு அவ்வளவே!!! நீங்கள் தமிழ் இலக்கிய ஆர்வத்தோடு இந்த பக்கத்திற்கு வந்திருந்தால்...மன்னிக்கவும்… Google உங்களை தவறான முகவரிக்கு அழைத்து வந்திருக்கிறது.

4 comments:

ஜோ/Joe said...

//முன்னுறை//

:(((

பிரசாத் said...

:((( சோக smiley எதுக்குன்னு புரியலையே ஜோ!!!

Anonymous said...

//முன்னுறை// --> முன்னுரை

பிரசாத் said...

ஹூம்…
முதல் post’லேயே கோணலா :-(???
சுட்டிக் காட்டியதற்கு நன்றி மாற்றி விடுகிறேன்.