Monday 4 June, 2007

தலைக்கவசம் தலைக்கு அவசியம்

Helmet அவசியமானதா இல்லையா? இதை விவாதிக்க எத்தனை பதிவுகள்!!! விட்டால் சிவாஜி பட range’க்கு discuss பண்ணுவாங்க போல. ஊருக்குப் போனா அங்கேயும் இதே பேச்சுதான்

“இதெல்லாம் city’ல ok! கிராமத்துலயெல்லாம் ஒத்து வராது”

“வண்டி ஒட்டுறவங்களுக்கு ok ஆனா பின்னாடி உக்காந்து போறவங்களுக்கு helmet எல்லாம் கொஞ்சம் over”

“Ladies’கு helmet எல்லாம் ஒத்து வராது”

“Helmet பொட்டா வழக்கை விழும்”

“4 வயசுக்கு மேலே எல்லாருமே helmet போடனுமா! பெரியவங்கன்னா சொல்லி புரிய வைக்கலாம், கொழந்தைங்க போட மாட்டேன்னு அடம் பிடிச்சா என்ன பன்றது?”

இப்படி பல comment’களை ஊரிலும் கேட்டேன். சென்ற வாரம் ஆனந்த விகடனில் வெளியான ஒரு சிறுகதை ஞாபகத்துக்கு வந்தது. அந்த சிறுகதை கீழே


இந்த கதையில் வரும் குமாரசாமியை போல நாமும் ஆகாமல் இருக்க helmet அவசியமே. உண்மைத்தமிழன் அவரோட blog’ல சொல்றார்,
“தமிழ்நாட்டில் சென்ற ஐந்து வருட காலத்தில் நடந்த சாலை விபத்துக்களில் உயிரிழந்தோரில் தலையில் அடிபட்டு இறந்தவர்கள் 5 சதவிகிதத்தினருக்கும் குறைவுதான்.”
http://truetamilans.blogspot.com/2007/05/blog-post_29.html

இந்த statistics’ஓட source எனக்கு தெரியாது ஆனா helmet அணிவதால் இந்த 5 சதவிகிதத்தில் ஒரு 20 சதவிகிதம் பேரை காப்பாற்ற முடிந்தால் கூட சாலை விபத்துகளில் இறப்பவர்களில் ஒவ்வொரு வருடமும் 1 சதவிகிதம் பேரை காப்பாற்ற முடியுமே.

தமிழ்நாடு காவல்துறையின் கணக்குப்படி 2005’ம் ஆண்டு சாலை விபத்துக்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை – 10003. (source - http://www.tn.gov.in/policynotes/archives/policy2006-07/police_1.htm ) .

அதாவது Helmet அணிந்திருந்தால் குறைந்தபட்சம் ஏறத்தாழ ஒரு 100 பேரையாவது காப்பாற்றியிருக்கலாம். இந்த எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் கூடிக்கொண்டே போகிறது என்பது மேலும் கவலையளிக்கும் விஷயம்.

ஆக நாம் அனைவரும் helmet அணிவதன் மூலம் ஓராண்டுக்கு 100 உயிர்கள் காப்பாற்றப்படும் (Indirect புண்ணியம்னு நெனைச்சுக்குங்க). யார் கண்டார் அந்த 100 பேரில் நானோ நீங்களோ அல்லது நமக்கு மிக நெருக்கமான ஒருவர் கூட இருக்கலாம்!!!

Helmet அணிவது அசௌகரியம்னு யாராவது சொல்லப்போறாங்க ஏன்னா அப்படி பார்த்தா முதன் முதலில் ஆடை அணிந்த மனிதனுக்கு ஆடையே அசௌகரியமானதாகத்தான் இருந்திருக்கும். மானம் எனும் மனிதன் உருவாக்கிய perception’ஐ பாதுகாக்க ஆடை அணிகிறோம், ஆனால் இயற்கை பரிசளித்த மண்டையை பாதுகாக்க ஒரு ஆடை (Helmet) அணிய இவ்வளவு தயக்கம்.

“ஆமா!!! தமிழ்நாட்டுல இருக்கற 6.5 கோடிக்கும் மேற்பட்ட மக்கள்’ல எனக்கு மட்டும்தான் Accident ஆகப்போவுதா. அதுலயும் correct’ஆ எனக்குத்தான் மண்டைல அடிப்பட போகுதா”னு நெனைக்காதீங்க. புள்ளி ராஜாவுக்கு மட்டுமல்ல எந்த ராஜாவுக்கும் Accident நேரலாம்.

ஆக கூட்டிக் கழிச்சு பாத்தா “Helmet company’களின் சூழ்ச்சி” “Insuranceகாரர்களின் கடுப்பு” “லாப நோக்கு அரசியல்” என எந்தக் காரணமா இருந்தாலும் Helmet இருக்கறது நல்லதுனே தோனுது.

எல்லாம் சரி இந்த திட்டத்தை தேசிய அளவில் அமல்படுத்த வழி உண்டா? ஏன் கேட்கறேன்னா Set Top box, Helmet’னு எல்லா திட்டங்களும் தமிழ் நாட்டுலயே ஆரம்பிக்கறதுனாலே லேசா சந்தேகம் வருது!

பி.கு: Original helmet பார்த்து வாங்கறது எப்படி? கீழே பாருங்க
http://maraboorjc.blogspot.com/2007/02/blog-post.html

4 comments:

குருத்து said...

வன் தட்டு பெயர்காரணம் என்ன?

பிரசாத் said...

வன் தட்டு – Hard Disk’ஐ குறிக்கிறது.

என்னுடைய எண்ணத்தில் தோன்றும் மற்றும் நான் impress ஆகும் விஷயங்களை பதிவு செய்வதற்காகத்தான் blog எழுத ஆரம்பித்தேன்.

எண்ணங்கள் என்றும் மாற்றத்திற்குட்பட்டவை என்று நம்புபவன் நான். இன்றுஎனக்கு பிடிக்கும் ஒரு விஷயம் நாளை எனக்கே பிடிக்காமல் போகும். இன்று ஆழ்ந்து யோசித்து எழுதும் ஒரு கருத்து சில வருடங்களில் எனக்கே உடன்பாடில்லாததாக மாறிப்போகும்.

இன்று எனக்கு பிடிக்கும் ஒரு விஷயம் சில காலங்களுக்கு முன் ஏன் எனக்கு பிடிக்காமல் இருந்தது என சரியாக நினைவுக்கு வருவதே இல்லை. உதாரணத்திற்கு நான் சிறு வயதில் இருக்கும்போது எனக்கு குழந்தைகள் என்றால் அறவே ஆகாது. என் சித்தப்பாவுக்கு பெண் குழந்தை பிறந்ததற்கு பார்க்க சென்றபோது கூட குழந்தை உள்ளே இருந்ததால் நான் அவர்கள் வீட்டிற்குள்ளேயே செல்லவில்லை. ஆனால் இன்றைக்கு குழந்தைகள் அதுவும் பெண் குழந்தைகள் என்றால் கொள்ளை பிரியம். நான் ஏன் அப்படி இருந்தேன் பிறகு எப்படி மாறினேன் என்பது எதுவும் சரியாக நினைவில் இல்லை.

தன் மேல் உள்ள அன்பு குறைந்து விடுமோ என்கிற Possessiveness காரணமாக இருக்கலாம். அல்லது வீட்டில் ஒரே குழந்தையாக பிறந்ததனால் குழந்தைகளின் அருமை தெரியாமல் போயிருக்கலாம். இப்படி ஒரு சில அனுமானங்களை தவிர இதுதான் காரணம் என எதையும் உறுதியாக சொல்லத் தெரியவில்லை.

என் எண்ண மூட்டைகளை அன்றைக்கே ஒரு backup எடுத்து வைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் எனத் தோன்றுவதுண்டு.


Computer’ல் ஒரு file’ஐ edit செய்ய வேண்டிய சூழ்நிலை வந்தால் ஏற்கனவே இருக்கும் file’ஐ ஒரு copy எடுத்து வைத்து விட்டு பிறகுதான் அதை மாற்ற ஆரம்பிப்போம். அப்படி மாற்றப்படும் பல version’களை Hard disk’ல் தான் சேமித்து வைப்போம். இதனால் முன்னால் இருந்த version’கும் இப்பொது மாற்றப்பட்ட version’க்கும் இருக்கும் வித்தியாசத்தை தெரிந்து கொள்வது எளிது.

அதே போல என் எண்ணங்களின் backup’ஆக இந்த blog’ம் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அதனால்தான் இதற்கு வன் தட்டு (Hard Disk) என்ற பெயர் பொருத்தமாக இருக்கும் என நினைத்தேன்.

இருபது வருடங்கள் கழித்து இந்த பதிவுகளை படித்தால் நிச்சயம் ஒரு சில பதிவுகளாவது எனக்கே ஆச்சரியத்தை அளிக்கும்.

குருத்து said...

நல்ல பெயர்காரணம்.

உங்கள் கருத்துகளில் நானும் உடன்படுகிறேன்.

சிலர் மட்டும் தான் யோசித்து, உங்களைப்போல நல்ல பெயர் சூட்டுகிறார்கள்.

பின்னூட்டமாக போட்டதை, இன்னும் கொஞ்சம் அசைப்போட்டு, அழுத்தமாக எழுதி, ஒரு பதிவாகப் போடுங்கள்.

பிரசாத் said...

நன்றி Socrates!!
நிச்சயம் செய்கிறேன்!!!