Friday 1 February, 2008

புரியாத புதிர்

இந்த வருட பொங்கலுக்கு சன் டி.வி'யில் தனுஷ் நயந்தாரா பேட்டியை ஒளிபரப்பினார்கள். பேட்டியின்போது நயந்தாராவையும் மீறி (ஹீ..ஹீ...) தனுஷ் சொன்ன ஒரு விஷயம் என்னை வெகுவாக கவர்ந்தது.

கேள்வி: உங்கள் மாமனார் ரஜினி ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். நீங்கள் எப்படி?

பதில் (தனுஷ்): ஆன்மீகத்தை பத்தி பேசரதெல்லாம் ரொம்ப கஷ்டம் சாதாரண விஷயமில்லை. ஆனா ஒரே ஒரு point சொல்லிடறேன். கடவுளை முழுக்க முழுக்க நம்பறதும் கஷ்டம், முழுக்க முழுக்க நம்பாம இருக்கிறதும் கஷ்டம்.

முழுக்க முழுக்க நம்பறவனுக்கு "ஒரு வேளை இல்லாம இருந்தா" அப்படின்னு ஒரு சந்தேகம் இருக்கும். அதே மாதிரி முழுக்க முழுக்க நம்பாம இருக்கிறவனுக்கும் "ஒரு வேளை இருந்துட்டா" அப்படினு ஒரு பயம் இருக்கும். ஒன்னு இத செய்யனும் இல்ல அத செய்யனும் நடுவுல இருந்தா Waste. 90% பேர் நடுவுல இருக்கவங்கதான்.


http://www.blog.isaitamil.net/?p=1943

கடவுள் மனம் சம்பந்தப்பட்ட விஷயமாகவும், அறிவியல் அறிவு சம்பந்தப்பட்ட விஷயமாகவும் பார்க்கப்படுகிறது! மனத்தின் பேச்சை கேட்பதா இல்லை அறிவின் பேச்சை கேட்பதா என்ற குழப்பம் என்றைக்குமே மனிதனுக்கு தீராத ஒன்று! அதுவரை கடவுளும் ஒரு புரியாத புதிர்தான்!

No comments: