Tuesday 1 May, 2007

கிராமத்து திருவிழா

திருவிழா என்றால் அது கிராமங்களில்தான். அதற்கு முக்கிய காரணம் அனைவரும் ஒற்றுமையாய் அதை முன்னின்று நடத்தும் விதம். சமீபத்தில் அப்படி ஒரு திருவிழாவிற்கு செல்ல நேர்ந்தது. கீழ்கானும் புகைப்படங்கள் அங்கே click’ செய்தவை.


குதிரை சவாரிக்கு colorful வண்டி ready


சவாரிக்கு குதிரையும் ready


குதிரை சவாரிதாங்க ஆனா ஒரு சின்ன வித்தியாசம் இங்க குதிரை மாட்டு வண்டி மேல சவாரி செய்யுது :-)

எங்கள் ஊருக்கு அருகில் உள்ள மற்றொரு கிராமத்தில் நடந்த திருவிழா இது. மொத்தம் இருபத்தி இரண்டு மண் குதிரைகள் நேர்த்திக்கடனாக செலுத்தப்பட்டன. ஒவ்வொரு குதிரைக்கும் ஒவ்வொரு கிடா வீதம் மொத்தம் இருபத்தி இரண்டு கிடா வெட்டி வழிபட்டனர் (நான் செல்வதற்குள் கிடா வெட்டு முடிந்து விட்டது அதனால் அந்த mass killing’ஐ capture செய்ய முடியவில்லை). பின்னர் ஒவ்வொரு குதிரையும் ஆளுக்கொரு மாட்டு வண்டியில் ஏறி (அதாவது ஏற்றப்பட்டு) ஊர்வலமாய் கோயிலை சென்றடைந்தன. மேலும் சில படங்கள் கீழே


மண் மாடு (மண் மனிதன் கூட உன்டு)



குதிரை sideview



வேம்பு (வேப்பிலை) இல்லாத திருவிழாவா!!!



ஒன்றிணைந்த செயல்பாடு



சிற்றுந்து – கிராமத்து ஜெட்

உபரி செய்தி:
ஒரு மண் குதிரையின் விலை --> ஆறாயிரம் ரூபாய்.
ஒரு மண் மாட்டின் விலை --> நூறு ரூபாய்.

2 comments:

Anonymous said...

Hi ,
Good work...
Hope in near future you get many topics to post in ur Blog.
BTW i'm the first person to comment in ur blog.:-)

பிரசாத் said...

Yeah.. Thanks a lot :)